கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிக முக்கியமான பழக்கவழக்கங்களுள் ஒன்றாக 20 விநாடிகள் வரை சவர்க்காரம் அல்லது சுத்திகரிப்பு திரவங்கள் பயன்படுத்தி கை கழுவுதல் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
இதற்காக சூரிய சக்தியின் உதவியில், கால் அழுத்தத்தில் தன்னிச்சையாக செயல்படும் கை கழுவும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார் இந்த இளம் கண்டுபிடிப்பாளர்.
இந்த மாணவன் சாய்ந்தமருதைச் சேர்ந்த மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி, ஏ.எம்.எம்.சௌபாத் ஆவர்.
குறித்த மாணவன் இதற்கு முன்னரும் பல புதிய வகை சாதனங்களை கண்டுபிடித்துள்ளார். இத்துடன் இவர் மேலும் பல முயற்சிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..