2020 க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதாவது எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களுக்கான பாடநெறிகளின் கீழ் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.