Welcome to Jettamil

2000 ம் ஆண்டு காணாமல்போன மகனை கண்டுபிடிக்க போராடிய தாயொருவர் மரணம்!

Share

காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மிகுந்த வேதனையுடன் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை