திருகோணமலை மடத்தடி சந்தியில் விபத்து: மோட்டார் சைக்கிள் பயணி படுகாயம்!
திருகோணமலை – மடத்தடி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 19) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதான வீதியின் வழியாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று, மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், மோட்டார் சைக்கிள் சுமார் 15 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசா என்பவரே திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





