வடக்கு, அனுராதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – பலத்த காற்று எச்சரிக்கை!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 28, 2025) எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று எச்சரிக்கை:
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.





