Welcome to Jettamil

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

thai pongal 2025

Share

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இந்த விழா நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

thai pongal 2025

இந்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெற்றது.

இதில், சபரிமலை யாத்திரைக்காக இலங்கையிலிருந்து அதிக அளவில் பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆதரவை பெறவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்தார்.

இதற்கான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை