கிளிநொச்சி – தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் தனது காணியில் தென்னைமரங்களுக்கு உரம் வைப்பதற்காக வெட்டியபொது பல வெடிபொருட்கள் மண்னில் புதைக்கப்பட்ட நிலையில் இருப்பதனை அவதானித்து,
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து,
தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்டதுடன், நீதிமன்ற அனுமதியுடன் அகல்வுப் பணிகள் சிறப்பு அதிரடிபடையினரால் நடைபெற்றுள்ளன.