ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவுஸ்திரேலியா பயணம்
இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் 07வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.