யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.
தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரத்தினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலாளரினால் நெல்லி மரக்கன்றும் நடப்பட்டது.
நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 52 வது படைப்பிரிவின் உப கட்டளை தளபதி, பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.