உருகுவேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆயிரத்தைக் கடந்தது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உருகுவேயில் 40ஆயிரத்து 529பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 100ஆவது நாடாக விளங்கும் உருகுவேயில், இதுவரை மொத்தமாக 425பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 642பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 958பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 95பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை 33ஆயிரத்து 146பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.