Welcome to Jettamil

புர்கா தடை விடயம் தொடர்பில் வெளியான தகவல்!

Share

நாட்டில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்தார்.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வது குறித்து தற்போது பரசீலிக்கப்பட்டு வருவதாகவும், புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்துக்குப் பின்னரே புர்கா மற்றும் நிகாப்பிற்கு  அரசு தடை விதிக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புர்கா மற்றும் பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை