Sunday, Jan 19, 2025

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு!

By jettamil

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இந்த அமைப்பு மேலும் தீவிரமடைவதால், இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகர வாய்ப்பு இருக்கிறது. இதற்கான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை கடிதப்படுத்தும் போது, பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.

இதனால், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் தீவின் மற்ற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு