டெல்லியில் பலத்த மழை பெய்ததால், யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
யமுனை ஆற்றின் அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது.
ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மஹாலுக்குள் நுழைந்துள்ளது.
தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி, தாஜ்மஹால் சுவரைத் தொட்டு வெள்ள நீர் ஓடுகின்றது.