பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தின் பெஷாவர் வீதியில் நேற்று இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பிரதேசங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிலொன்று இடிந்த நிலையில், இடிபாடுகளிலிருந்து 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்னர் எனவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.