திருமண நிகழ்வுக்குச் சென்ற கார் விபத்து! – தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்!
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 19) அதிகாலை கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்றே, ஆசாத் நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்றில் மோதித் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தின்போது காரில் இருந்த பாதுகாப்புப் பைகள் (Airbags) இயங்கியதன் காரணமாக, காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





