கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை, மில்லகந்த பிரதேசம், பாணடுகம நில்வல கங்கை மற்றும் துனமலே பிரதேசத்தில் அத்தனகல்லு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் சிறிதளவு வெள்ள மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.