அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் மோசடி
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நோயாளிகள் உட்பட பலருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆகவே, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த சுமார் 7000 பேர் தற்போதைக்கு அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.