Welcome to Jettamil

இஷாரா செவ்வந்தி அதிகாரிகள் முன்னிலையில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

Share

இஷாரா செவ்வந்தி அதிகாரிகள் முன்னிலையில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கருதப்பட்டு, நேபாளத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் (அக்டோபர் 13, 2025) நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் அவர் மறைந்திருந்தபோது, சிறப்பு அதிரடிப் படையின் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டார்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னைக் கைது செய்வார் என இஷாரா அறிந்திருந்தார்.

7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாக இருந்த போதும், அவருக்கு வெறுப்பு நிலைமை ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இலங்கை செல்லலாம் என எண்ணியபோதும், கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்திலேயே பதுங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவவைச் சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் பிடிபட்டார்.

இவருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளப் பொலிஸார் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் உதவியுடன் நேபாளத்தில் நடத்திய மூன்று நாள் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை