மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர், கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தமது எக்ஸ் (Twitter) கணக்கில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
“நான் எனது சார்பிலும், இலங்கை மக்களும், இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங்கின் குடும்பத்தாருக்கும், உலகம் முழுவதும் அவர் மீது அன்பும் மரியாதையும் கொண்ட அனைத்து நபர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றேன்.
கலாநிதி மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியா மட்டுமின்றி உலகை மாற்றியது. 2004 முதல் 2014 வரை அவர் இந்திய பிரதமராக இருந்த காலத்தில், கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு திட்டம் போன்ற பல முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்தினார். இவை அவரது சமத்துவத்திற்கு மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பை காட்டுகின்றன.
சர்வதேச ஒத்துழைப்பில் எடுக்கப்பட்ட அவரது முக்கியமான முன்னெடுப்புகள், BRICS போன்ற அமைப்புகளுடன் பலவிதமான ஒத்துழைப்புகளை உருவாக்கியிருக்கின்றன. இந்தியா–அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர் தனது சிறந்த இராஜதந்திரத்தை வெளிப்படுத்தினார்.
அவரின் தன்னடக்கம், அறிவுத்திறன் மற்றும் அரச சேவைக்கு தாராளமான அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததிகளுக்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்”
இவ்வாறு அப்பதிவில் வெளியிட்டுள்ளார்.