Welcome to Jettamil

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

Share

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.11.2024) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுடன், மாத்தளை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை