எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை முடக்குவது அல்லது, ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து, அமைச்சர்களும், அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
எனினும், அதற்கான தேவை இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் கிடைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு பாடசாலைகள் மற்றும் பொதுத்துறை சேவைகளை, இணைய வழியில் நடத்துவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.