உக்ரேனுக்கு மேலும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ,இலக்குகளை எட்டக் கூடிய அந்த ஆயுதங்கள் 700 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தின் ஓர் அங்கமாக அமையும்.
ஏவுகணைகள் ரஷ்யாவுக்குள் குறிவைத்துத் தாக்காது என்று உக்ரேன் உறுதியளித்ததையடுத்து அந்தத் திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது.
அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனியப் போர் முடிவடையும் என்று பைடன் கூறினார்.
பேச்சுவார்த்தையில் உக்ரேனின் கரத்தை வலுப்படுத்த ஆயுதம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.