இலங்கை விமானப்படையின் சாகசமும், கண்காட்சியும் இன்று 3ஆம் நாள் – கமால் குணரத்ன வருகை!
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் (06) ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.