புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!
என்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த காரில் பயணித்த தந்தையும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





