திருகோணமலை, உப்பூறல் கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் நேற்று சனிக்கிழமை (17) அதிகாலை உற்பகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.
இதன்போது 15 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்துள்ளது.அத்தோடு வீடொன்று அங்கிருந்த உடமைகளை காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு வீட்டில் இருந்தோர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.அத்தோடு தொடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவது கவலை தெரிவிக்கின்றனர் .
எனவே விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தில் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈட்டை பெற்றுத் தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Kiyas Shafe













