Welcome to Jettamil

வாடிக்கையாளர் சேவை உதவியாளர் – மக்கள் வங்கி, விண்ணப்ப திகதி நீடிப்பு…!

Share

மக்கள் வங்கியில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுள்ள நிலையில், இதற்காக விண்ணப்ப முடிவு திகதி ஆனது 02/06/2021 இல் இருந்து 21/06/2021 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைவாய்ப்பு ஆனாது க. பொ. த உயர்தர தகைமையுடன் விண்ணப்பிக்க அரிய வாய்ப்பாகும்.

வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவரியவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுகள் இடம்பெறும்.

தேவையான தகைமைகள்:

விண்ணப்பதாரர் இலங்கை பிரசையாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் க.பொ.த ( சா.த ) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் 05 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்திருக்க வேண்டும்.

05 திறமைச் சித்திகளுக்கிடையில் சிங்களம்/ தமிழ்மொழி , கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

மற்றும்

க.பொ.த ( உ.த ) பரீட்சையில் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் 03 பாடங்களில் சாதாரண சித்தி ( பொது ஆங்கில பாடத்தைத் தவிர்த்து ) பெற்றிருக்க வேண்டும்.

வயது எல்லை:

அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதியன்று 18 வயதுக்கு குறையாமலும் 23 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். ( அதற்கமைய வயதெல்லை தொடர்பான தகைமை பெறுவது , விண்ணப்பதாரியின் பிறந்த திகதி 2003.06.02 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1998.06.02 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னராயின் மாத்திரமாகும்.)

மேலும் இவ் வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மற்றவர்கள் பயன் பெற இந்த தகவலை பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

முழு விபரம்: Download

Online விண்ணப்பம் : Apply now

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!

Join Whatsapp

Join Telegram

Join Facebook

join viber

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை