நாளை 13 மணித்தியாலம் மின்தடை! – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 26) மின்தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
வவுனியா, மன்னார் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.
வேலைகள் பூர்த்தியானவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.





