Welcome to Jettamil

நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் பலி: உதவி அதிபர், ஆசிரியர்கள் உட்பட 7 பேர் கைது

Share

நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் பலி: உதவி அதிபர், ஆசிரியர்கள் உட்பட 7 பேர் கைது

நுகேகொடை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்தச் சிறுவன் கல்வி பயின்ற முன்பள்ளியின் (Pre-school) உதவி அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 8ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.

அன்றைய தினம், சிறுவன் உட்பட ஒரு மாணவர் குழு, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.

உடனடியாகக் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் சடலம் தொடர்பாக நேற்று நடைபெற்ற பிரேத பரிசோதனையில், களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி திறந்த தீர்ப்பு (Open Verdict) வழங்கியதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்குப் பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர், இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் ஆகிய 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்:

இந்தச் சம்பவம் குறித்து மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை