மத்திய கிழக்கில் புதிய ஆரம்பம்: இஸ்ரேல் நாடாளுமன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் உரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கில் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குவதாக இன்று (அக்டோபர் 13, 2025) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) உரையாற்றும் போது தெரிவித்தார்.
ட்ரம்ப்பிற்கு இஸ்ரேல் நன்றி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று பிற்பகல் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது, இஸ்ரேல் நாடாளுமன்றம் அவரது அமைதிக்கான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தது.
நாடாளுமன்றில் உரையாற்றிய ட்ரம்ப், “இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் மற்றும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தின் விளைவு
இதேவேளை, காசா பகுதியில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பு இன்று தங்கள் பிடியில் இருந்த அனைத்து இஸ்ரேலியப் பணயக் கைதிகளையும் விடுவித்தது. மேலும், இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் கிட்டத்தட்ட 2,000 பலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





