முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு, சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று சிகிச்சையளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சுகயீனம் காரணமாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது நோய் நிலைமை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
எனினும், அவருக்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று சிகிச்சையளிப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.