சரியான எடையின்றி பாணை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று முதல் சந்தை சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டத்தின்படி, சரியான எடை இல்லாதது, அதே போல் விலையைக் காட்டாமல் இருப்பது சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.
நேற்று முதல் இந்த சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்க மற்றும் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.