இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் பிரசன்னரணசிங்க, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் கற்கைநெறியை பூர்த்தி செய்த சுமார் 500 வரையானமாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.