உள்ளூராட்சி தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“சாதாரண தரப் பரீட்சைக்கு முன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் விரைவான திருத்தம் தேவையாகும். ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம்.”