துமிந்த சில்வாவின் சிகிச்சை அறை புகைப்படங்களை வெளியிட்ட சிறைச்சாலைகள் திணைக்களம்
மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு, சிறைச்சாலை மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக வெளியான தகவல்களை சிறைச்சாலை திணைக்களம் மறுத்துள்ளது.
மேலும், துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வரும் தங்கி சிகிச்சைப்பெறும் அறையின் புகைப்படங்களை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சிகிச்சை அறையின் புகைப்படங்கள் மற்றும் பரிசீலனைகள்
சிறைச்சாலை மருத்துவமனையின் அரை எண் 3 இல், 50க்கும் மேற்பட்ட கைதிகளுடன் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போது, அவர் சிகிச்சை அளித்த நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் இயக்குநர் துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்ததாகவும் திசாநாயக்க கூறினார்.
சில்வா தற்போது சிறை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து சிறைச்சாலைத்திணைக்களம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முறையான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு மருத்துவக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைத்திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று பேச்சாளர் கூறினார்.
முன்னதாக, துமிந்த சில்வா உட்பட சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக கைதிகள் உரிமைகள் குழு குற்றம் சுமத்தியது. இதன் பின்னணியில், சிறைச்சாலைகள் பேச்சாளர் இந்த தெளிவாக்கலை வழங்கினார்.
இரு முதற்கட்ட விசாரணைகள் மற்றும் தள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சில்வாவுக்கு தனி கழிப்பறை அல்லது வேறு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.