2025 உயர்தரப் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் இன்று சனிக்கிழமை (ஒக்டோபர் 25, 2025) அறிவித்துள்ளது.
நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறும்.
பரீட்சை நாடளாவிய ரீதியாக 2362 பரீட்சை மையங்களில் நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை (GIT) டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும்.
இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியாக 1665 நிலையங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





