இலங்கை – இஸ்ரேல் விமான சேவை ஆசனங்களைப் பதிவு செய்தோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கை – இஸ்ரேலிற்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந் நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயணத் திகதியை மாற்றிக் கொள்ளுமாறு அந்நாட்டு இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.