சாதாரண பரிட்சை முடிவுகள் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் பரீட்சை முடிவுகள் வெளியாக உள்ளது என பரீட்சைகள் திணைக்களமோ அல்லது கல்வி அமைச்சோ உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை
பெரும்பாலும் சாதாரண தர பரீட்சை முடிவுகள் அக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த பரீட்சை முடிவுகளை மிகவும் விரைவாக வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.