Welcome to Jettamil

இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த யாழ். வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! – முன்னாள் புலி உறுப்பினரும் கைது!

Share

இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த யாழ். வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! – முன்னாள் புலி உறுப்பினரும் கைது!

இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் படகுகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்த பிரதான சந்தேகநபரின் யாழ்ப்பாண வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு பிஸ்டல் ரகத் துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் யாழ்ப்பாண வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள், ஏழு 9MM நேரடி தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட சம்பந்தப்பட்ட ஆயுதங்களை வழங்கிய, 43 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஷாரா செவ்வந்தி நாடுகடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை