25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு நியமனம்!
இன்று (30.12.2024), இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் சேவை நாளையுடன் நிறைவடையும் நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு, இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாகவும், பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.