பேருந்தில் மாணவி ஒருவரை பின்னிருக்கையில் அமர்ந்து தடவிய நபர்
பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னிருக்கையில் அமர்ந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பெயரில் கருவாதோட்டம் காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர்.
கொரடையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தில் பயணித்த 27 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவரை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்தார்.
இதன்போது பின்னால் அமர்ந்திருந்த சந்தேகநபர், பல சந்தர்ப்பங்களில் குறித்த மாணவியின் முதுகை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தியதாக காவத்துறையினர் நீதிமன்றல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்திய போது, பயணிகளில் இருந்த ஒரு சில காவத்துறை அதிகாரி, சந்தேகநபரை பிடித்து கருவாத்தோட்ட காவத்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்கஸ் போதரகம, தலா 2 லட்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்வதற்கு பிணை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, டிசம்பர் முதலாம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.





