பிரதமர் ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் பிரேமதாச கைச்சாத்து!
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கையாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாகக் கைச்சாத்திட்டார்.
6-ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்ட சர்ச்சை மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளை முன்னிறுத்தி இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.





