Welcome to Jettamil

பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை கோரல்

Share

பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை கோரல்

போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால் அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக, பருத்தித்துறைப் பொலிஸார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள்:

“ரவுடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.”

“பல விடயங்களில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்குத் தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன்.”

பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்துக் குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன்.

இந்த விடயங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களைத் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை