இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரஷ்யா தனது நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை வழங்க உள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மெஸ்கோ நகரில் உள்ள சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளர் Andrey Kaprin, அண்மையில் இந்த தகவலை ரஷ்ய வானொலியில் வெளியிட்டார். இந்த தகவல், ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் TASS மூலம் பகிரப்பட்டுள்ளது.
இந்த புதிய தடுப்பூசியானது பொதுவாக புற்றுநோய் தடுக்கும் நோக்கில் வெளியிடப்படவுள்ளதற்குப் பதிலாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும். மேற்கு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள புற்றுநோய் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும், அதன் பயன்தன்மை, அதைக் கொண்ட பரிசோதனை முறைகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.
இலங்கையில் உள்ள புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், 2022 ஆம் ஆண்டில் 635,000 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு செயல்பாட்டுக்கான மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிகள் ஏற்கனவே சந்தையில் உள்ளன.
மேலும், அமெரிக்காவில் புளோரிடா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள், மூளை புற்றுநோய் தடுப்பதற்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றனர்.