நாட்டின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் தெரிவித்துள்ளார். புதிய அதிபருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றைய தினம் (19) நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது டுவிட்டர் பதிவின்மூலம் அவர் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுவதுடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் பதிவிட்டுள்ளார்.





