பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
சமூக ஊடக பக்கங்களில் பரப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள் குறித்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பதிலாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன, இது தொடர்பான போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.