2025-க்குள் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு!
2025 ஆம் ஆண்டுக்குள், 340,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக புறப்படலாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனை பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் அறிவித்தார்.
பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க கூறும்போது, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றனர். அதன்படி, 2024 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
2024 இல் வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65% பேர் தொழில்முறை வேலைகளுக்கும், 35% பேர் குறைந்தபட்ச தொழில்சார் வேலைகளுக்கும் சென்றதாகவும், பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
2025-ல், 75% தொழிலாளர்கள் தொழில்முறை வேலைகளுக்கும், 25% குறைந்தபட்ச தொழில்சார் வேலைகளுக்கும் அனுப்பப்படுவார்கள் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிகமான தொழிலாளர்கள் அனுப்பப்படுவதாகவும், 84,000 பேர் குவைத்துக்கு, 55,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு, 52,000 பேர் சவுதி அரேபியாவில் பணியிடங்களில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணியகம் 15,900 இஸ்ரேலிய வேலைகளையும், 9,000 ஜப்பானிய வேலைகளையும், 8,000 தென் கொரியாவிற்கு தொழிலாளர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.