Welcome to Jettamil

போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல்: 38ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Share

போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல்: 38ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 21) வைத்தியசாலை வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி, வைத்தியசாலை சமூகத்தினர், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், நினைவேந்தலை முன்னிட்டு நோயாளிகளுக்குச் சக்கர நாற்காலிகளும் (Wheelchairs) வழங்கிவைக்கப்பட்டன.

1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை