ஆட்கடத்தலுக்கு எதிரான வேலைத்திட்டம் தொடர்பில் தாய்லாந்து பிரதமர் கலந்துரையாடல்
தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதியமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பயனுள்ள கலந்துரையாடல்களை பிரதியமைச்சர் பிரதமருக்கு விளக்கினார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான வேலைத்திட்டம் மற்றும் மியன்மாரில் ஆட்கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
தற்போதைய ஆபத்தில் சிக்கியுள்ள 18 இலங்கையர்களை விடுவிக்க தாய்லாந்து அரசாங்கத்தின் மேலதிக ஆதரவினை எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், தாய்லாந்து-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.