வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அலெக்ஸிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர் முகத்தை எடுத்துக் கட்டுவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.