பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பிற்குப் பதிலாக இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பு 1972 மே 22 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று.
அதன்படி பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை முழு சுதந்திரம் பெற்ற நாளை குடியரசு தினம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.